tamilnadu

சரண்டர் வாகனங்களுக்கு ஐடியல் வரி பழைய பஸ் வியாபாரிகள் சங்கம் வரவேற்பு

கோவை, அக். 24 –  சரண்டர் வாகனங்களுக்கு வெற்றுவரி (ஐடியல் வரி) விதிப்பதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எங்களின் கோரிக்கையின் நியாத்தை உணர்ந்து இந்த  ஆணை பிறப்பித்துள்ளதை தமிழ்நாடு பழைய பஸ் வியாபாரிகள் அசோசியன் வர வேற்பு தெரிவித்துள்ளது என தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் கரும்பத்தம்பட்டி விநாயகா பழனிச்சாமி, செயலாளர் தம்புகார்ஸ் தம்பு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, சரண்டர் செய்யப்பட்ட வாக னம், பர்மிட் ரத்து செய்யப்பட்ட வாகனம், புதுப்பிக்கப்படாத, காலவதியான வாகனம் உள்ளிட்ட வாகனங்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் படி வெற்றுவரி (ஐடியல் வரி) வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் போக்குவரத்துறைச் சார்ந்த அனைத்தும் ஆன்லைன் வசதியாக்கப்பட்டபோது இந்த வெற்றுவரி விதிப்புக்கான அம்சங்கள் இடம்பெறவில்லை. இதன்காரணமாக எந்த  ஓட்டமும் இல்லாமல் நின்று கொண்டிருக் கும் பேருந்து உள்ளிட்ட வாகனங்க ளுக்கு அபராதத்துடன் சேர்ந்து லட்சக்க ணக்கில் பணம் செலுத்த வேண்டிய நிலை  ஏற்பட்டது. இது பழைய பேருந்து  வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளா னார்கள்.

இதனையடுத்து, எங்கள் சங்கத் தின் நிர்வாகிகள், தமிழ்நாடு ட்ரான்ஸ் போர்ட் ஆணையர் தென்காசி ஜவர்கலால் அவர்களை சந்தித்து பிரச்சனைகள் குறித்து  விரிவாக எடுத்துக் கூறினோம். சரண்டர்  செய்யப்பட்ட வாகனங்களுக்கு மோட்டார்  வாகன சட்டப்படி ஐடியல் வரிவிதிப்புப் படி வரிவசூலிக்க வேண்டும் என்கிற  கோரிக்கையை அழுத்தமாக முன்வைத் தோம். எங்களின் கோரிக்கையின் நியா யத்தை உணர்ந்து அக். 21 ஆம் தேதி ஐடியல்  வரிவிதிப்பிற்கான அரசாணையை  பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆணையின் காரணமாக பழைய  பேருந்து வியாபாரிகள் பெரிதும் பலனடை வார்கள். அரசின் இந்த ஆணையை  தமிழ்நாடு பழைய பஸ் வியாபாரிகள் அசோ சியன் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு, போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து ஆனையர் தென்காசி ஜவர் கலால் ஐஏஎஸ் ஆகியோருக்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.