tamilnadu

img

பொங்கலூரில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு பெருவிழா

திருப்பூர், செப். 6- பொங்கலூரில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு பெருவிழா வெள்ளியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திற்குட் பட்ட பொங்கலூர் லட்சுமி திருமண மண்டபத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு பெருவிழா நடைபெற் றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார்.  இவ்விழாவில், விவசாயிகள் பயன்பெறும் வகை யில் அமைக்கபட்டிருந்த வேளாண்மை தொழில் நுட்ப கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, தண்ணீ ரின் நிலைப்பாடும் மற்றும் அதன் தேவைகள் குறித்த சிறப்பு கையேட்டினை வெளியிட்டு,வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சம்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீர்மேலாண்மை மைய இயக்குநர் முனைவர்.எஸ்.பன்னீர் செல்வம், விரிவாக்க கல்வி இயக்குநர் (பொ) முனைவர் ரவிக்குமார் தியோடர், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் ஆனந்தராஜா,  வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.மனோகரன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் கே.எஸ்.சுகந்தி, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.ராஜேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்திய மூர்த்தி, நபார்டு வங்கி மேலாளர் ராஜு, பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, பொங்கலூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவாச் சலம், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கத்தலை வர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி கள்   மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.