tamilnadu

img

அ.கணேசமூர்த்திக்கு வாக்கு கேட்டு ஈரோட்டில் வாகன பிரச்சாரம்

ஈரோடு, ஏப்.16-ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மதிமுக அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு இரண்டு சக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்றது. இந்த இருசக்கர வாகனப் பேரணி ஈரோடு தலைமை தேர்தல் பணிமனையிலிருந்து துவங்கி சூரம்பட்டி நால்ரோடு, சூரம்பட்டிவலசு, சங்கு நகர், சக்தி மஹால், குமலன்குட்டை, சம்பத் நகர், சூளை, வஉசி பார்க், காந்தி சிலை, மரப்பாலம், காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா உட்பட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது.இந்த பேரணிக்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மதிமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், தொகுதி பொறுப்பாளர் ப.மாரிமுத்து, ஈரோடு நகர செயலாளர் பி.சுந்தரராஜன், தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மண்டல செயலாளர் நா.விநாயகமூர்த்தி,திமுக நகர செயலாளர் சுப்பிரமணியம் உட்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

;