tamilnadu

வால்பாறை பேருந்து நிலையம் பழைய இடத்திற்கே மாற்றம்

பொள்ளாச்சி, அக்.31-  வால்பாறை பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த பேருந்து நிலையம், மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம் செய் யப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வால்பாறையில் காந்தி சிலை அருகே இருந்த பேருந்து நிலையம் சில பரா மரிப்பு பணி காரணமாக, பணிமனை பகு திக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்கா லிகமாக மாற்றப்பட்ட அப்பேருந்து நிலை யத்தில் எந்தவொரு அடிப்படை வசதிக ளும் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக் குள்ளாகி வந்தனர். ஆகவே, தற்போது பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண் டும் அல்லது பழைய இடத்திற்கே பேருந்து களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சிஐடியு உள்ளிட்ட அமைப்பினர் வலியு றுத்தி வந்தனர். இந்நிலையில், பழைய பேருந்து நிலையமான காந்தி சிலைக்கே பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. இத னால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.