tamilnadu

img

இளம்பிள்ளை அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறு

சேலம், அக். 30- இளம்பிள்ளை அருகே மூடப்படாத ஆழ்துளை குழாய் கிணற்றை உடனடியாக மூட அரசு நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுவ னேரி ஊராட்சி முன்சீப் தோட்டம் பகுதியில் அப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த  10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட் டது. ஆனால், இதில் நீர்வரத்து இல்லாததால் இந்த  அழ்துளை கிணற்றை முறையாக மூடாமல் அப் படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். தற்போது வரை அந்த அழ்துளை குழாய் கிணறு மூடப்படா மல் உள்ளது. இதனால் குழந்தைகள்  தவறி விழும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்த அழ்துளை கிணற்றை மூட  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;