அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படுத்துக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
உடுமலை, ஜூலை 11- மடத்துக்குளம் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்து குளம் தாலுகா குழு கிளைகள் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத் திலிருந்து மடத்துக்குளம் தனி தாலுகா வாக கடந்த 2009ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டது. இங்கு அரசு மருத்துவமனை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட் டிருந்தது. இதன்படி மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில் ஆரம்ப சுகாதாரம் நிலைய மாக கட்டிடத்தில் மருத்துவமனை ஆரம்பிக் கப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு தாலுகா மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மடத்துக் குளம் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் சிகிச்சை பெற போதுமான மருத்து வர்கள், செவிலியர்களை உடனடியாக நிய மனம் செய்ய வேண்டும். இம்மருத்துவ மனைக்கு போதுமான மருந்து, மாத்தி ரைகள் வழங்க வேண்டும். ஜெனரேட்டர், கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். அனைத்து நாட்களிலும் ரத்தப்பரி சோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உறவினருக்கு கடன் வாங்கிக் கொடுத்து கடனாளி ஆனவர் தற்கொலை: இருவர் கைது
திருப்பூர், ஜூலை 11 – திருப்பூரில் தனது உறவினர்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்து, அந்த பணத்தை அவர்கள் திரும்பித் தராததால் வேறு பக்கம் கூடுதல் வட்டிக்குக் கடன் வாங்கி கடனாளியானவர் உருக்கமான கடிதம்எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொ லைக்குத் தூண்டியதாக உறவினர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த தேவபிரகாஷ் (31) என்பவர் தனது மனைவி நித்யா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது சித்தி செல்வி, சித்தப்பா சுரேஷ்குமார் ஆகியோரின் அவசர தேவைக்காக நண்பர்களிடம் சுமார் ஆறு லட்சம் ரூபாய் கடனாக பெற்று தந் துள்ளார். ஆனால் உறவினர்கள் கடன் தொகையைத் திரும்பத் தரவில்லை. எனவே நண்பர்களிடம் பெற்ற கடனை அடைப்ப தற்காக தேவபிரகாஷ் தனியார் வங்கியில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றார். அதில் நண்பர் களுக்குரிய கடன் தொகையை செலுத்தி விட்டார். வங்கி அடமானக் கடனை அடைப் பதற்காக மீண்டும் தனது சித்தப்பா, சித்தி யிடம் கேட்டபோது அவர்கள் தரக்குறை வாகப் பேசி கடன் தொகையை தர மறுத்து விட்டனர். கடன் தொகையைப் பெற நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து இரண்டாண்டாக நிலுவையில் உள்ளது. அத்துடன் இவர் நடத்திய உணவகமும் நலிவைச் சந்தித்தது. வேலையும் இல்லாமல் உடல்நலிவுற்றது. எனவே தனது பிரச்சனை தொடர்பாக தனது மனைவி, குழந்தைகளுக்கு உருக்க மான கடிதம் எழுதி வைத்துவிட்டு தேவ பிரகாஷ் சில தினங்களுக்கு முன் தற் கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர் உறவினர்கள் செல்வி, சுரேஷ்குமார் கடன் வாங்கி ஏமாற்றியதால் இந்த நிலை ஏற் பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து தேவ பிரகாஷை தற்கொலைக்குத் தூண்டிய தாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
தாராபுரம், ஜூலை 11- தாராபுரம் பாலசுப்பிரமணியம் நகருக்கு தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி பொது மக்கள் வியாழனன்று சார் ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். தாராபுரம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பாலசுப்பிரமணியம் நகரில் வசிக்கும் பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு, சார் ஆட்சியர் பவன்குமாரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, பாலசுப்பிர மணியம் நகரில் தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் வீட்டு கழிப்பறை கட்டியுள்ளவர்களுக்கு இது வரை அரசு மானியம் வழங்கப்படவில்லை. சபரிஅய்யப்பன் நகரில் தெருவிளக்குகள் எரிவதில்லை. எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
நகைக்கடையில் நூதன முறையில் மோசடி இரு பெண்கள் கைது
தாராபுரம், ஜூலை 11- தாராபுரத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் நூதன முறையில் மோசடி செய்ய முயன்ற சேலத்தை சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள நகைக்கடைக்கு இரு பெண்கள் கைக்குழந்தையுடன் வந்தனர். அவர்கள் நகை கடை உரிமையாளர் கிருஷ்ணனிடம் தங்களிடம் உள்ள தங்கநகைகளை வைத்துக்கொண்டு புதிய நகைகள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். நகைகளை வாங்கி பார்த்து அதை தங்கம்தானா என சோதனை செய்தார். பின்னர் 8சவரன் என உறுதிப்படுத்திக்கொண்ட கிருஷ்ணன் அந்த நகைகளை வாங்கிக் கொள்ள சம்மதித்துள்ளார். இதற்கிடையில் ஒரு பெண் அவரிடம் பேச்சுகொடுத்துக் கொண்டே அவரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்துள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட மற்றொரு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கிருஷ்ணனிடம் கொடுத்த தங்கநகைகளை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக கவரிங் நகை களை வைத்துவிட்டார். பின்னர் டிசைன் பிடிக்கவில்லை என கூறி நகைக்கு பதிலாக பணம் தாருங்கள் என கேட்டுள்ளனர். அவ்வாறு நகைகளுக்கு பணம் தருவதில்லை புதிய நகை மட்டுமே தருவோம் என கூறி யுள்ளார். மேலும் சந்தேகமடைந்த கிருஷ்ணன் அவர்களை அமர வைத்துவிட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அந்த பெண்கள் கவரிங் நகையை வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து தாராபுரம் காவல்நிலையத்திற்கு தகவல்அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசார ணையில் சேலம், தாதாகாபட்டி, என்ஜிஜிஓ காலனியை சேர்ந்த கோவிந்தன் மனைவி ராதா (34). அதேப் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி தன லட்சுமி (23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தாராபுரம் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து இரு பெண் களிடமும் விசாரணை நடத்தி வரு கின்றனர்.