முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு அழைப்பு
உதகை, ஜூன் 18- முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட் டத்தின் கீழ் 1997 முதல் 2001ஆம் ஆண்டு வரை வைப்புத் தொகை பத்தி ரம் பெற்றவர்கள் தற்போது 18 வயது பூர்த்தியடைந்தி ருந்தால் முதிர்வு தொகை பெற வைப்புத் தொகை பத் திர நகலுடன் நீலகிரி மாவட்ட சமூக நல அலுவல கத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவ லக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் 1ல் ரூ.50 ஆயிரமும், திட்டம் 2ல் ரூ.25ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் வட்டாட்சிய ரிடமிருந்து பெறப்பட்ட தாயின் இருப்பிடச்சான்று, ஆண் வாரிசு இல்லை யென்ற சான்று, தாய் மற்றும் தந்தையின் வயது மற்றும் சாதிச்சான்றுகள், குழந்தை களின் பிறப்புச் சான்றுகள், குடும்பக் கட்டுப்பாடு அறு வைச் சிகிச்சைச் சான்று, குடும்ப புகைப்படம், பெற் றோரின் திருமண பத்தி ரிக்கை ஆகியவற்றுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். இத் திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சமாக ரூ.72 ஆயி ரமாக இருக்க வேண்டும். தாயின் வயது 35க்குள் இருக்க வேண்டும். குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் தேர்வு
கோவை, ஜூன் 18– தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங் கங்களின் கோவை தெற்கு மற்றும் பேரூர் மாநாடுகள் நடைபெற்றது. கோவை அரசு ஊழியர் சங்க கட்டிடத் தில் நடைபெற்ற கோவை தெற்கு மாநாட்டில் தலைவ ராக கே.பரமசிவம், செய லாளராக பி.விவேகானந் தன், பொருளாளராக எம்.கோபால் உள்ளிட்ட நிர்வா கக்குழுவினர் தேர்வு செய்ய பட்டனர். இதேபோல், பேரூர் வட் டக்கிளை மாநாட்டில் தலைவராக பஞ்சலிங்கம், செயலாளராக சுப்பிரமணி யம், பொருளாளராக எம்.கந்தசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.