மதுரை, மே 5- மதுரையில் அனுமதி பெற்ற கடைகள், தொழிற்கூடங்கள் போதிய சமுக இடைவெளியை பின்பற்றாவிட்டால் சீல் வைக்கப்படும் என மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் கூறியுள்ளார். செவ்வாயன்று அவர் அளித்த பேட்டி:- மதுரை மாவட்டத்தில் கொரோ னாவால் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகரில் 57 பேர், புறநகரில் 34 பேர். மருத்துவமனையில் 46 பேர் சிகிச்சை யில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 25 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறது.
நரிமேடு, அண்ணாநகர் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. மதுரை மாவட் டத்தில் சளி, இருமல், காய்ச்சல் பாதித்த 7,700 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ காலத்தின் ஒரு வாரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
தொழில் சார்ந்த பகுதிகள், ஏற்று மதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறு வனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பிளம்பர், எலெக்ட்ரிசியன், ஏசி மெக் கானிக் அந்தந்த வட்டாட்சியர் மற்றும் ஆட்சியர் அனுமதியுடன் பணியாற்ற லாம்.
மதுரை மாவட்டத்தில் தனிக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. தங்கும் விடுதிகள், பேன்சி ஸ்டோர், நகைக்கடைகள், திருமண தகவல் மையம், பழைய பேப்பர் கடைகள், செருப்பு கடைகள், ஜவுளி கடைகள், சாலை உணவகங்கள், தேநீர் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், புத்தக கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், சமுதாயக்கூடங்கள், அடகு கடை கள், ரெடிமேட் விற்பனை கடைகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள், கேட்டரிங் ஆகியவை மதுரை மாநக ராட்சியில் செயல்பட அனுமதி இல்லை. காய்கறி, பலசரக்குக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. மதுரை வாடிப்பட்டி டெக்ஸ்டைல் பார்க் சமூக இடைவெளியுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து போதிய அனுமதியுடன் சிறு குறு தொழில்களை மேற்கொள்ளலாம். அதற்கு தனி அனுமதி தேவை யில்லை. பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வாக னங்கள் அனுமதி பெற்று இயங்க லாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள ஊழியர்களை பணிகளுக்கு அழைக்கக் கூடாது. அதற்கு அனுமதி கிடையாது. மாவட்டத்தில் தினசரி 300 மாதிரிகள் சோதிக்கப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து ஒன்பது பேர் வந்துள்ளனர். அவர்கள் வீடுகளில் கண்காணிக்கப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் இருவர் செல்ல தடை உள்ளது.
மதுரையில் மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த 35 நபர்கள் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். தொற்று ஏற்பட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறிந்து அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.