கோவை, மே 14-கோவையில் ஏலச்சீட்டு நடத்தி பலகோடி மோசடி செய்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.கோவை வரதராஜபுரம் அருகேஉள்ள நீலிக்கோணாம்பாளையம் பெரிய வீதியில் உள்ள புனிதா கார்டனைசேர்ந்தவர் ஞானபிரகாசம்(67). இவரதுமகன் உதயராஜ்(41). இவர்கள் இருவரும் வரதராஜபுரம் காமராஜர் சாலையில் யுஎஸ்வி சிட்பண்ட் என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் ஏலச்சீட்டில்முதலீடு செய்யும்தொகைக்கு அதிக, வட்டி தரப்படும் என்ற ஆசை வார்த்தையை நம்பி, ஏராளமான பொதுமக்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஞானபிரகாசம் மற்றும்உதயராஜ் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான சீட்டு நடத்தினர். இதற்காக முதலீடு செய்பவர்களிடம் மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூலித்து வந்தனர். இந்நிலையில், சிங்காநல்லூர் நஞ்சப்பா நகரை சேர்ந்த தொழிலதிபர் அருள்மொழிவர்மன்(67) என்பவர்கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஞாயிறன்று ஒருபுகார் அளித்தார். அதில் கடந்த 2013-ம்ஆண்டு நான் ரூ.10 லட்சம் தொகையைஉதயராஜ், ஞானபிரகாசம் நடத்திவந்த ஏலச்சீட்டு நிறுவனத்தில் முதலீடுசெய்தேன்.ஆனால் சீட்டு காலம் முடிந்த பின்னரும் முதிர்வு தொகையை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்புகார் தொடர்பாக மாநகர காவல்ஆணையர் சுமித்சரண்,குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் ஆகியோர்உத்தரவின்பேரில் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் மோசடிபிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையின் இறுதியில் உதயராஜ்,ஞானபிரகாசம் ஆகியோர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறும் போது,இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டுமுதல் ஏலச்சீட்டு நிறுவனத்தை நடத்திவந்துள்ளனர். முதல் புகார்தாரர் அருள்மொழிவர்மனை தொடர்ந்து,13 பேர் இவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். பெரும்பாலானோர் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என இவர்களிடம் முதலீடுசெய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்நிறுவனத்தினர் 30-க்கும்மேற்பட்டவர்களிடம் ரூ.2கோடி வரைவசூலித்து மோசடி செய்து இருக்கலாம்என தெரியவந்துள்ளது என்றனர்.