tamilnadu

img

விபத்தில் இருவர் பலி

கோவை, பிப். 18- கிணத்துக்கடவு அருகே ஏற்பட்ட விபத் தில் பொள்ளாச்சி கேப் டன் தொலைக்காட்சி நிருபர் மற்றும் அவரு டன் சென்ற நண்பரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி, போடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசே கர். இவர் பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபராகவும், தேமுதிகவின் மேற்கு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர், பணி நிமித்தம் காரணமாக கோவை வந்து, பின்னர்  செவ்வாயன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் காரில், பொள்ளாச்சி நோக்கி நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் தடுப்புச் சுவரில் மோதியது. இதில், சந்திரசேகர் மற்றும் கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், செந்தில் என்பவர் சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.