tamilnadu

மஞ்சள் ஏலத்திற்கு இரு நாட்கள் விடுமுறை

ஈரோடு,ஆக.10- ஈரோடு பகுதியில் நடக் கும் மஞ்சள் ஏலத்துக்கு ஆக.12,15 ஆகிய இரு தினங்கள் விடுமுறை விடுக் கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை மற்றும் செம் மாம்பாளையத்தில் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ் சள் ஏலம் நடைபெறும். இந்நிலையில் ஆக. 12 ஆம் தேதியன்று பக்ரீத் பண் டிகைக்காகவும், வரும் ஆக. 15 ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மஞ் சள் ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்படுகிறது. மேலும், ஆக.13, 14 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களிலும் வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடக்கும் என ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற் றும் கிடங்கு உரிமையாளர் கள் சங்க செயலாளர் சத்திய மூர்த்தி தெரிவித்தார்.