tamilnadu

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

அவிநாசி, நவ. 26- அவிநாசி அருகே ரங்காநகரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி யினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சி ரங்கா நகரில் வசிப்பவர் பழனிசாமி (46). இவர் அவிநாசி யில் நூல் கடை நடத்தி வருகிறார். இவர் திங்களன்று காலை வழக்கம்போல் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கடைக்குச் சென்று விட்டார். இந்நிலையில் பகல் 1 மணியள வில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று இரும்பு கம்பியால் வீட்டின் கதவு பூட்டை உடைத்துள்ளார். உள்ளே சென்ற மர்ம நபர் வீட்டில் நகை, பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள் ளார். இக்கொள்ளை முயற்சி அப்பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், காவல்துறை யினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரங்கா நகரில் 5 முறை வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.