திருப்பூர், ஜூலை 14 - திருப்பூர் மாவட்டம், நெருப் பெரிச்சல் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் வாலிபர் சங்க உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் வாலிபர் சங்க கிளை நிர் வாகிகள், உறுப்பினர்கள் வீடு, வீடாகச் சென்று 15 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர் களைச் சந்தித்து சங்கத்தின் நோக் கத்தை எடுத்துக் கூறி உறுப்பி னர்களாகச் சேர்த்து வருகின்றனர். அதன்படி, நெருப்பெரிச்சல் சமத்துவபுரம் ஜெ.ஜெ.நகர் பகுதி யிலும் ஞாயிறன்று வீடு, வீடாக உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றது. அப்பகுதியில் 11 வீடுகளில் திரு நங்கையர் குடும்பத்தார் வசித்து வரு கின்றனர். அவர்களிடமும் வாலிபர் சங்க நிர்வாகிகள் சங்கத்தின் நோக் கத்தை எடுத்துக் கூறி, உறுப்பினர் களாக சேரும்படி கேட்டுக் கொண் டனர். இதையடுத்து 30 திரு நங்கைகள் ஆர்வத்துடன் சந்தா தொகை கொடுத்து ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். முன்ன தாக வாலிபர் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் அருள் உறுப்பினர் பதிவைத் துவக்கி வைத்தார். வாலிபர் சங்க கிளை நிர்வாகிகள் தன்ராஜ், சபரி, பிரான்சிஸ், முத்துக் குமார் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.