tamilnadu

img

விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள்

உலக சுற்றுலா தினம் 

சேலம், செப்.25- உலக சுற்றுலா தினத் தையொட்டி சென்னை யிலிருந்து இலவச விமான  பயணம் மூலம் சேலத்தை  சுற்றி பார்க்க அழைத்த  வரப்பட்ட மாற்றுத்திற னாளி மாணவ, மாணவி களை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  உலக சுற்றுலா தினம்  செப்.17ஆம்  தேதி முதல்  27ம் தேதி வரை கொண்டா டப்படுகிறது. இதை முன்னிட்டு சுற்றுலா துறை சார்பில் அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் தூய்மைப்படுத்தும் பணி,  பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சுற்றுலா குழுவின ருடன் பார்வையிடுதல் மற்றும் கலாச் சார நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 25க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகள்  சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரையும் சேலம் மாவட்ட சுற்றுலா  துறை சார்பில் பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வர வேற்றார்.  இம்மாணவ, மாணவிகள் சேலம் மற்றும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங் களுக்கு அழைத்து செல்லப்பட்டு பாரம் பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களை பார்வையிட உள் ளனர். இதன்பின்னர் மீண்டும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட  உள்ளனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஜனார்த்தனன், வெற்றிவேல், ஹரி பாஸ்கர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.