கோபிசெட்டிபாளையம், அக்.19- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவி யில் சுற்றுலா பயணிகள் குளிக்க வும், பரிசல் இயக்கவும் பொதுப்பணித் துறையினர் தடைவிதித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிக்கைக் காலங் களில் ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் பல்லாயிக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதை வழக்கமாக கொண்டுள்ள னர். கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, பூங் காங்காவில் குழந்தைகளுடன் விளை யாடி மகிழ்ந்து பொழுதை போக்கி செல்கின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் ஓடைகளில் வழிந்தோடி பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 5 ஆயிரம் கனஅடிக்கும் மேல் கொடிவேரி தடுப்பணை அருவி யைத் தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக் கவும், பரிசல் பயணம் மேற்கொள்ள வும் பொதுப்பணித்துறையினர் தடைவிதித்துள்ளனர். மேலும், கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து எச்சரிக்கை பலகைகளும் வைத்துள் ளனர். மேலும் பங்களாபுதூர் கடத்தூர் காவல்துறையினரால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தவுபிறப்பிக்கப் பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் சுற்றுலா பயணி களை எச்சரித்து அறிவுறுத்தியும் வரு கின்றனர். இதனால் பவானி ஆற்றில் ஏற் பட்ட மழை வெள்ளநீர் குறைந்த பிறகு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் விடு முறையை கழிக்க குடும்பத்தினருடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.