மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பூர், அக். 21- திருப்பூர் அருகே அமராவதி நகரில் வடிகால் வசதியின்றி கொசு வினால் நோய்தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். திருப்பூர் அருகே அமராவதி நகர் பகுதியில் சாக்கடை மற்றும் தெருவிளக்குகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற் றும் நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது மழை காலம் என்பதால் சாக்கடை மற்றும் வடிகால் வசதி இல்லாததன் காரணமாக சாலை யில் மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரியோர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக சாக்கடை, வடிகால் மற்றும் தெரு விளக்கு வசதிகள் அமைத்துக்கொடுக்கு மாறு மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.
விபத்தை தடுக்க
அவினாசி ஒன்றியம், திருமுரு கன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் ஒன்பதாவது வார்டு பகுதியில் ராமகிருஷ்ணா பள்ளி பல வருடங்களாக செயல் பட்டு வருகின்றது. இப்பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களின் வாகனங்களை பள்ளி நிர்வாகம் உள்ளே அனும திக்காத காரணத்தால் வெளியில் நிறுத்திச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற் பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுகி றது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கு மாறு பொதுமக்கள் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு
திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுக் குளத்திற்கு மழை காலத்தில் வரக்கூடிய நீர் வழிப் பாதையை தனியார் சிலர் ஆக்கிர மித்து சுவர் எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி மண்ணைக் கொட்டி நீர் செல்லாத வகையில் தடுத்து நிறுத்தி வருகிறார். இதுதொடர்பாக மாவட்ட நிர்வா கம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
வாக்குச்சாவடியை மாற்றியமைக்காதே
திருப்பூர் மாநகராட்சி 54 வார்டுக்குட்பட்ட கருப்பகவுண் டம்பாளையம் பகுதி பொதுமக்கள் அரசு பள்ளியில் 9 வது பூத்தில் வாக்களித்து வந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் கருப்பகவுண்டன் பாளையதைச் சேர்ந்த பொது மக்கள் வீரபாண்டியில் உள்ள வாக்குச்சாவடிக்கு மாற்றம் செய் யப்பட்டுள்ளனர். இதனால் வய தான முதியவர் உள்ளிட்ட அப் பகுதி மக்கள் தொலை தூரமாக வாக்களிக்க செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே பழைய இடத்திற்கு வாக்குச் சாவடியை மாற்றியமைக்க வேண் டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.