திருப்பூர், பிப். 28 – திருப்பூர் வளம் பாலம் அருகே அறிவொளி சாலையில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பினர், குடியுரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பினர் நடத்தி வரும் தொடர் தர்ணா போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் ஆதரித்து வாழ்த்துத் தெரிவித்தார். வெள்ளியன்று தர்ணா போராட்ட வளாகத்திற்கு வந்திருந்த பி.ஆர்.நடராஜன் எம்.பி., குடியுரிமை எதிர்ப்புப் போராட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி ஆதரவு தெரிவித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெய பால், மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி, பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் மற் றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு தெற்கு நகர நிர் வாகி இப்ராகிம் ஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.