tamilnadu

img

ஊராட்சி தலைவர் இருக்கையில் அமர்ந்து டிக் டாக்

மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், பிப். 10 - தாராபுரம் அருகே கவுண்டச்சிப் புதூர் ஊராட்சிமன்றத் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பு வகிக்கும் நிலையில் அந்த தலைவர் இருக்கை யில் மர்ம நபர் ஒருவர் அமர்ந்து டிக் – டாக் செயலியில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத் திற்குப் புறம்பாக செயல்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக் கப்பட்டுள்ளது. தாராபுரம் கொண்டரசம்பாளை யம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் திங்களன்று ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமா ரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கையில் அமர்ந்து மர்ம நபர் ஒருவர் டிக்-டாக் செய்தது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அவர் அந்த இருக்கையில் அமர்ந்த போது, அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் பேங்க் பாஸ்புக், இருப்பு தொகை, ஊராட்சி அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஆகியவவை முழு வதும் விசாரணை செய்ய வேண்டும். மேலும், அந்த இருக்கையில் அமர்ந் தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

வீடு ஒதுக்க கோரிக்கை

திருப்பூர், இடுவம்பாளையம் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஜோதி என்பவர் அளித்த மனுவில், தமக்கு அசோக்பாபு (37) என்ற மனவளர்ச்சி குன்றிய மகன் இருக்கிறார். பிறந்தது முதல் பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் எவ் வித முன்னேற்றமும் இல்லை. தற் போது வாடகை வீட்டில் குடியிருந்து வரும் நிலையில், மன வளர்ச்சி குன் றிய மகனால் அக்கம்பக்கத்தினர் சங்க டப்படுகின்றனர். அவரது அதீதமான செயல்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. காப்ப கத்தில் சேர்த்தும் அங்கும் அவரை பராமரிக்க முடியவில்லை. இயற்கை உபாதை உட்பட எந்த வேலையும் அவரால் செய்ய முடியாது. வாடகை குடியிருப்பில் எங்களால் வசிக்க முடியாத நிலையில், மாவட்ட நிர்வா கம் எங்களுக்கு குடியிருக்க வீடோ அல்லது வீட்டுமனைப் பட்டாவோ ஏற்பாடு செய்து தந்தால் மகனை வளர்க்க உதவியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.