tamilnadu

img

திரைக்கலைஞர் விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் கோவை எஸ்.பி.,யிடம் மாதர் சங்கம் புகார்

கோவை, அக்.22–  திரைக்கலைஞர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப் பினர் ராஜலட்சுமி தலைமையில் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதி மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தமி ழகத்தில் சமீப காலங்களாக ஊடகவியலா ளர்கள், திரைக்கலைஞர்கள், செயல்பாட் டாளர்கள் ஆகியோரை குறிவைத்து சமூக வலைத்தளங்களில் தாக்குதல்கள் நடத்தப் படுகிறது. இதுகுறித்து மாதர் சங்கத்தினர் தொடர்ந்து புகார் அளித்தும் காவல்துறை யின் அலட்சியப்போக்கால் சமூக விரோதி கள் சிலர் இச்செயல்களை அச்சமின்றி தொடர்ந்து வருகின்றனர்.  

இந்நிலையில், பிரபல திரைக்கலைஞர் விஜய்சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை குறித்த படத்தில் நடிக்கக்கூடாது என்றும், மீறி நடித் தால் அவரின் மகளை பாலியல் வன்கொலை செய்வோம் என பகிரங்மாக சமூக வலை தளங்களில் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருகிற நிலையில் காவல்துறையினரின் உரிய தலையீடு இல்லாததன் விளைவாகவே இது போன்ற மிரட்டல் பதிவுகளை வெளியிடு கின்றனர். ஆகவே, இப்போதாவது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது.