திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.