நாமக்கல், நவ.20- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி யில் கடந்த பல மாதங்களாக ஆணையாளர் நியமிக்கப் படாமல் இருந்த நிலையில், பொறுப்பு ஆணையாளர் மட்டுமே பணிகளை கவ னித்து வந்தார். இந்நிலையில் கள்ள குறிச்சி முதல் நிலை நக ராட்சியில் ஆணையாளராக இருந்து வந்த அ.வ.சையத் முஸ்தபா கமாலை பதவி உயர்வு அடிப்டையில் தேர்வு நிலை நகராட்சி ஆணையாளராக தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளராக அ.வ. சையத் முஸ்தபா கமால் செவ்வாயன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.