உடுமலை, ஆக. 3 – உடுமலையில் புத்தகத் திருவிழா கலை பேரணியுடன் சனியன்று தொடங்கியது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் எட்டாவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. மத்திய பேருந்து நிலையத் தில் இருந்து கலை பேரணியுடன் தொடங் கிய திருவிழா, கண்காட்சி நடைபெறும் தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலுக்கு வந்தது. அங்கு அமைக்கப்பட்ட அரங்கில் புத்தக திருவிழாவை எஸ். எம். குரூப் நிறு வனத்தின் தலைவர் எஸ்.நாகராஜ் திறந்து வைத்தார். முதல் விற்பனையை ஆடிட்டா் ஆா்.கந்தசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எல்.எம்.பாபு, யுகேபி முத்துக்குமாரசாமி, ச.செல்லத்துரை, ராஜ ரத்தினம், வா்ஷினி இளங்கோவன், வர வேற்புக்குழு செயலாளர் என்.சக்திவேல், எம்.பாலசந்திரமூா்த்தி மற்றும் ஏராளமான புத்தகப் பிரியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர் முன்னதாக, மடத்துக்குளம் உயிர் கலைக் குழுவினரின் சிலம்பம், களரி மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.