அவிநாசி, ஆக. 20- அவிநாசி அருகே விலையில்லா மடிக்கணினி கேட்டு சட்டப்பேரவைத் தலைவரிடம் முறையிடச் சென்ற முன் னாள் மாணவர்களை காவல் துறையினர் விரட்டியடித் தனர். அவிநாசி அடுத்து சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்களன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் பி.தனபால் கலந்து கொண்டு கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கினார். மேலும் மாணவ, மாணவிக ளுக்கு விலையில்லா மடிக்கணினியும் வழங்கினார். இந்நிலையில் கடந்த 2017,18 ஆம் ஆண்டு சேவூர் அரசு பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி வழங்கவில்லை என 150 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பேரவைத் தலைவரின் வாக னத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். அருகில் இருந்த காவல்துறையினர் மாணவர்களை விரட்டியடித்தனர். விழாவில் அமைச்சர் பேசும்போது, அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் களைந்து சென்றனர்.