அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
கோபி, பிப்.21- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் மற்றும் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவகலகங்களில் மாவட்ட ஆட்சி யர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களுடன் உள்ளாட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் உள்ளாட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசுகையில், நேற்றைய முன்தி னம் பள்ளிவாசலில் உலமாக்ளாக இருப்ப வர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500 லிருந்து ரூ.3 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் , ஹஜ் பயணிகளுக்கு ரூ. 15 கோடி செலவில் சென்னையில் தங்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு நிதியை நிறுத்தினாலும் கூட மாநில அரசே ஏற்றுக் கொள்ள திட்டமிடப்படுள்ளதாகஅவர் தெரி வித்தார். மேலும், ஒவ்வொரு தொகுதி வாரியாக உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து உள்ளாட்சியில் மேற்கொள்ளப்பட வேண் டிய திட்டங்கள் குறித்த ஆலோசனைகளை தமிழக முதல்வர் விளக்கியுள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஒன்றியத்தி லும் அதிகாரிகள் மூன்று நாட்கள் தங்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். என்றார். மேலும்,ssw கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பல கோடி செலவில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத் தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக உருவாக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டஅலுவலர்கள் வருவாய் கோட் டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர் விஜயகுமார் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தலைவர்கள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்.