tamilnadu

img

தன்னம்பிக்கையாளர் ஜக்கு காலமானார்

கோவை, செப். 12–  மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கையாளராக செயல்பட்ட இணையதள வடிவ மைப்பாளர் ஜெகதீஷ் என்ற ஜக்கு (28) வியாழனன்று காலமானார். சமூக ஆர்வலர், வலைப்பதி வாளர், இணையதள வடிவமைப் பாளர், எழுத்தாளர் என பல பரி ணாமம் கொண்டவர் ஜெகதீஸ் என்கிற ஜக்கு.  மாற்றுத்திறனாளி யான இவர் பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து நண்பர் களிடம், உறவினர்களிடம், பொது மக்களிடமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்ததுடன் தனது கண் மற்றும்  உடல் உறுப்புகளை தானம் செய்யவும் பதிவு செய் துள்ளார். இதேபோல், மாற்றுத்திறனா ளிகளுக்கு தொடர்ந்து உளவியல் ஆலோசனை,  அவர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கி  அவர்களின் ஆற்றலை வெளிப் படுத்த உதவி வந்த இவரின் செயலை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்கள் ஜக்குவை நேரில் சந்தித்து பாராட் டியுள்ளனர். இந்நிலையில், இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இவரை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உடல் நலம் தேற ஆறு தல் தெரிவித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழ னன்று ஜெகதீஷ் என்ற ஜக்கு காலமானார். இவரின் மறைவு செய்தியறிந்து பல்வேறு தரப் பினரும் அஞ்சலி செலுத்தி வரு கின்றனர்.