tamilnadu

வங்கியில் கொள்ளை முயற்சி

அன்னூர், ஜூலை 12- அன்னூரில் கத்தோலிக்க வங்கியில் அதிகாலை நேரத் தில்  கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றுள்ளது. அன்னூர் ஒன்றியம், திருப்பூர் செல்லும் சாலையில் கத்தோலிக் வங்கி அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் நேரத்தில் வங்கியின் பின்புறமாக ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந் துள்ளனர். இதையடுத்து வங்கியில் பணம் வைத்திருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்தபோது அலாரம் சத்தம்  எழுப்பவே தப்பித்து சென்று விட்டனர். இதுதொடர்பாக அன்னூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.