கோவை, ஆக. 27 – குடிநீரை வணிகமயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து கோவையில் குழாய் பதிக் கும் பணிக்கு வந்த சூயஸ் நிறுவன ஊழியர்களை பொதுமக்கள் சிறைப்பிடித்து விரட்டியடித்த சம் பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை மாநகரத்தில் உள்ள நூறு வார்டுகளுக்கும் குடிநீர் விநி யோகத்தை பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனம் மேற்கொள்ள கோவை மாநக ராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு கோவை மாநகர மக்கள் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின் றனர். மேலும், இத்திட்டம் எதிர் காலத்தில் பெரும் ஆபத்தை உரு வாக்கும் வாய்ப்புள்ளதால், உடன டியாக சூயஸ் நிறுவனத்தின் ஒப் பந்தத்தை ரத்து செய்யவதோடு கோவை மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோகத்தை மேற் கொள்ள வேண்டுமென எதிர்க்கட் சிகளும் தொடர்ந்து போராடி வரு கின்றன. இத்தகைய சூழலில் சூயஸ் நிறு வனம் கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பொதுமக் கள் ஒன்று சேர வழியில்லை என்ப தால் வேக,வேகமாக தங்களது பணியை முன்னெடுத்து வருகி றது. இதன் ஒருபகுதியாக கோவை ஒண்டிப்புதூரை அடுத்த எஸ்ஐஎச்எஸ் காலனியில் வியா ழனன்று சூயஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பொக்லைன் உள் ளிட்ட இயந்திரங்களோடு குழாய் பதிக்கும் பணிகளுக்காக வந்து சாலையைத் தோண்ட ஆரம்பித்தி னர். இதனால் பெரும் ஆவேசம டைந்த அப்பகுதி மக்கள் சூயஸ் நிறுவனத்தின் ஊழியர்களை சிறைபிடித்தனர். மேலும் தோண் டிய சாலையை மீண்டும் மூடாமல் விடமாட்டோம் என உறுதிபட தெரிவித்தனர். இதனையறிந்து சம்பவ இடத் திற்கு வந்த மாநகராட்சி அதிகாரி கள் பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், பொதுமக்கள் சூயஸ் நிறுவ னத்தை அனுமதிக்க முடியாது என அதிகாரிகளுடன் கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். இதன்பின் னர் தோண்டிய சாலையை மீண்டும் மண்ணைப் போட்டு மூடி யபின்னர், பொக்லைன் இயந்தி ரம் மற்றும் ஊழியர்களைத் திருப்பி அனுப்பினர். எதிர்ப்பில்லாமல் பணியை முடித்து விடலாம் என நினைத்திருந்த சூயஸ் நிறுவன ஊழியர்களை பொதுமக்களே தன்னெழுச்சியாக விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.