உடுமலை, ஜன. 31- தேசம் காப்போம் என்ற தலைப்பில் உடுமலை- மடத்துக்குளம் வட்டம் முற் போக்காளர்கள் கூட்டமைப்பு சார்பாக பிரச்சாரம் நடைபெற்றது. சுதந்திரம், நீதி, சமத்துவம், சகோதரத் துவம், சமய சார்பின்மை, சமதர்மம் என் னும் கோட்பாடுகளுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாய் ஆளும் மதவாத சக்தி களாலும் இந்தியா அரசியலமைப்புச் சட் டம் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துஅரசியல் சட்டத்தை பாதுகாத்து தேசம் காப்போம் என திரா விடர் விடுதலைக் கழகமாநில பொதுக்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் தலைமை யில் குமரலிங்கம், மடத்துக்குளம், கணி யூர், காரத்தொழுவு, திருவிழா பாடி, குடிமங் கலம், வேதம் உடைத்து கொங்கல்நகரம், முக்கோணம் ஆகிய பகுதிகளில் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் துப்புரவு பணியாளர் மேம்பாட்டு மைய மாநில துணை செயலாளர் விடுதலை மணி, செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார், தமிழர் பண்பாட்டு பேரவை வழக்கறிஞர் சாதிக்பாட்சா, திராவிடர் கழகம் சாமிநாதன், தமிழர் பண்பாட்டு பேரவை பால் நாராய ணன், ஆதித்தமிழர் பேரவை வழக்குறை ஞர் பெரியார்தாசன், திராவிட தமிழர் கட்சி மாநில பொருளாளர் தங்கவேல், அம்பேத் கர் மக்கள் சமத்துவக் கட்சி தங்கராஜ், மக் கள் அதிகாரம் சூர்யா, திராவிட விடுதலை கழகம் அய்யப்பன் மற்றும் பலர் இந்த பரப்புரை பயணத்தில் கலந்து கொண்ட னர்.