tamilnadu

அதிமுக கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்த பொதுமக்கள்

ஈரோடு, ஏப். 18-வாக்கிற்கு பணம் வழங்கிய அதிமுக நிர்வாகிகளிடம், பொதுமக்கள் பணத்தை வசூலித்து திருப்பி அளித்தனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானி பகுதியில் ஒலகடம் அருகே உள்ள குண்டு பாயூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் சார்பில் முன்னணி நிர்வாகிகள் புதனன்று இரவு வாக்கிற்கு ரூ.250 வீதம் அனைத்து வீடுகளுக்கும் பட்டியலிட்டு பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் அவர்களிடமே பணத்தை திருப்பி அளித்தனர். இதனால் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

;