tamilnadu

அதிகாரிகளின் அலட்சியம் - மாதர் சங்கம் முற்றுகை

கோவை, அக். 3 -   நுண் நிதி நிறுவனங்களின் அடாவடி செயல்பாடுகளை தடுத்து நிறுத்தாமல் அலட்சியப் படுத்தும்  தெற்கு வட்டாட்சியர்  அலுவலக அதிகாரிகளை கண் டித்து  மாதர் சங்கத்தினர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நுண்நிதி  நிறுவனங்க ளிடம் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், வீட் டில் இருக்கும்  பெண்களுக்கு உட னடியாக பணத்தை செலுத்த நெருக்கடி கொடுக்கக் கூடாது என மாதர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர் பாக மாவட்ட ஆட்சியர் அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவு றுத்தி இருந்த நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நுண்நிதி நிறுவனத்தைச் சேர்ந்த வர்கள் கடன் பெற்றவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகு றித்து சனியன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெற்கு வட்டாச்சியர் அலுவல கத்தில் புகார் அளிக்க வந்தனர். அதுசமயம் பணியில் இருந்த அதிகாரிகள், அலட்சியமாக  பேசி யுள்ளனர். இதனையடுத்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கொண்டு மாதர் சங்கத்தினர் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது நுண் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தாகவும், ஆட்சியர் அறிவுரை வழங்கியும் அதை மதிக்காமல் கடன் வசூல் செய்யும் நிதிநிறுவ னங்கள் செயல்படுவதாகவும், இது குறித்து  வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிக ளிடம் புகார் அளித்தால் முறை யான பதில் அளிக்கவில்லை என வும் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.  இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினரிடம்  காவல் துறையி னரும், வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அவர்கள் உறுதியளித் ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.  இப்போராட்ட்த்தில், மாதர் சங்கத்தின மாவட்ட செயலா ளர் ராதிகா, மாநிலக்குழு உறுப்பி னர் ராஜலட்சுமி, சுதா, சாமுண் டீஸ்வரி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.