காலமானார் கோவை, நவ. 5– மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மேற்கு நகரக்குழு உறுப்பினர் எம்.முத்துமணி செவ் வாயன்று காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மேற்கு நகரக் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தவர் தோழர் எம்.முத்துமணி. எம்.எம்.பிரிண்டர்ஸ் என்கிற அச்சகத்தை நடத்தி வந்த முத்துமணி இளம் வயது முதலே கட்சியின் நடவடிக்கையின் பால் ஈர்க்கப்பட்டு கட்சி கிளை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு களிலும் நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இதே போல் தீக்கதிர் நாளிதழை விநியோகிக்கும் பணியி லும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் செவ்வாயன்று காலை எம்.முத்து மணிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவையறிந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா மற்றும் மேற்கு நகர செயலாளர் பி.கே. சுகுமாரன், தீக்கதிர் விளம்பர பிரவு மேலாளர் கே. அழகப்பன் உள்ளிட்ட தலைவர்கள் சுந்தரம் வீதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து செவ்வாயன்று மாலை ஆத்துப்பாலத்தில் உள்ள மின் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.