அவிநாசி, ஜூலை 12- அவிநாசி ஒன்றியங் களில் உள்ள குளம், குட்டை களில் மழை நீர் சேகரிப் பதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் குடி மராமத்துப் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல் வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குளம், குட்டைகளில் கரைகளை உயர்த் துவது, தேவையற்ற செடிகள் அகற்றப் படும். இதையடுத்து குளம், குட்டைகளில் மழைநீர் சேகரிக்கப்படும். இப்பணிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால் குட்டையில் மழை நீர் தேங்குவதால், நிலத்தடி நீர் உயரும் வாய்ப் புள்ளது என பணியாளர்கள் தெரிவித்தனர்.