tamilnadu

img

தொங்கும் சுடுகாட்டு பாலம்... தொடரும் மக்கள் அவதி

விழுப்புரம் மாவட்டம், திரு வெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திலுள்ள சித்திலிங்கமடம் ஊராட்சியில் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கு கிறது. இதனால் சுடுகாட்டிற்கு செல்ல முடியாமல் தலித் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்ற னர். சித்தலிங்கமடத்தில் உள்ள தலித் மக்களுக்கான சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ராகவன் வாய்க்காலின் மேல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறு பாலம் கட்டப்பட்டது.  இப்பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மண்கரையை வாய்க்காலில் வந்த நீர் பாலத்தின் ஒரு பகுதியைச் சேதமடையச் செய்தது.  இதனால் பாலத்தின் காங்கிரீட்  ஸ்லாப் உடைந்து தொங்கியதால் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும்போது, ஏறக்குறைய 15 அடிக்கு மேல் பள்ளத்தில் இறங்கி கால்வாயைக் கடந்து பின் எடுத்துச் செல்ல வேடிய அவலநிலை உள்ளது.  (இது தொடர்பாக கடந்த ஆண்டு தீக்கதிரில் செய்திக் கட்டுரை வெளியானது) இதனைத் தொடர்ந்து பாலம் கட்டித் தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்த னர். மேலும் திருவெண்ணெ ய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் 12.12.2017 லும், 28.2.2018 லும், 10.12.2018 மற்றும் 26.8.2019 என நான்கு முறை இப்பாலத்தை கட்டித்தர வேண்டும் என உரிய துறைகளுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் இப்பிரச்ச னைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததால்  தலித் மக்களின் அவதி தீரவில்லை.

இதேபோல் அருகிலுள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கான சுடு காட்டிற்கு செல்லும் பாதையோ சேறும், சகதியுமாக மிகவும் குறுகி உள்ளது. இறந்தவரின் உடலை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போதுகூட வாகனம் ஆங்காங்கே சேற்றில் மாட்டி கவிழக்கூடிய அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதன் மீதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரிய ஊராட்சியான இங்கு மெயின் ரோட்டிலிருந்து உள்ளே செல்லும் சாலை பள்ளம், படுகுழியாக மாறி இருக்கக் கூடிய நிலையில் இதனையும் சரி செய்வதில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.  இங்குள்ள அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து உள்புறம் முழுவதும் ஒழுகும் நிலையில் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் குளத்தங்கரை அருகேயுள்ள சுகாதார வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடு நிலைப்பள்ளி வளாகங்கள் மழை பெய்தால் நீர் சூழ்ந்து நோய் பரப்பும் நிலையில் குப்பை கூளங்க ளுடன் சுத்தமின்றி காணப்படுகிறது. மேலும் சித்தலிங்கமடம், டி.புதுப்பாளையம் கிராமங்களில் நீண்ட நாட்களாக நூறுநாள் வேலையும் அளிக்கப்படாததால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இக்கிராம கிளைகள் சார்பில் மேற்கண்ட குறைபாடுகளை போக்கிடக்கோரி ஒப்பாரி மற்றும் சங்கு ஊதி போராட்டம் நடத்திட துண்டுப்பிரசுரங்கள் வெளி யிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.