திருப்பூர் வாசகர் வட்டத்தில் பேச்சு
திருப்பூர், அக்.18- உலகமய நுகர்வு பண்பாட்டு சூழல் நம் மரபு சார்ந்த பல முக்கிய உற்பத்தி பண்பாடுகளை அழித்துக் கொண்டி ருக்கிறது. நாம் எதை இழக்கிறோம் என்பதே தெரியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்தான சூழல் நிலவு கிறது என்று முற்போக்கு வாசகர் வட்ட அமர்வில் தெரிவிக் கப்பட்டது. முற்போக்கு வாசகர் வட்டத்தின் 65ஆவது அமர்வு தியாகி பழனிச்சாமி நிலையத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் கனகராஜா தலைமை யில் வெள்ளியன்று நடைபெற்றது. சமூகப் பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் எழுதிய மரபும், புதுமையும் நூலை அறிமுகம் செய்து ஆசிரியர் மணி கண்டபிரபு உரையாற்றினார். இந்நூலில் நாம் பயன்படுத் தும் பல சொற்களுக்கு, அறியாத பொருளை ஆணித்தர மாக, எளிதில் புரியும் படி எடுத்துரைக்கிறார். உலகமய நுகர்வு பண்பாட்டில் உணவு உற்பத்தி, உழைப்பு சார்ந்த பல்வேறு விசயங்கள் வழக்கொழிந்து கொண்டிருக்கின் றன. பண்பாட்டுரீதியாக வைதீக சக்திகள் ஆதிக்கம் செலுத் தும் அம்சங்களை பரமசிவன் எடுத்துரைப்பதாக மணிகண்ட பிரபு தெரிவித்தார்.