தடாகம் பகுதியில் சட்ட விரோதமாக மண் அள்ளும் செங்கல் சூளைகள்
மேட்டுப்பாளையம், செப்.22- மேட்டுப்பாளையம் அருகே உள்ள தடாகம் சுற்றுவட்டார மலையடிவார பகுதிகளில் சட்டத் திற்கு புறம்பாக மண் அள்ளும் செங்கல் சூளைகள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு வனத்துறையினர் கடிதம் எழுதி யுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள சின்ன தடாகம், பெரிய தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், சோமையனூர் பகுதிகளில் இரு நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல அரசின் உரிய உரிமம் பெறாமல் இயங்கி வருவ தாக புகார் உள்ளது. இந்த சூளை களில் பல செங்கல் தயாரிப்பு பணிக்காக மலைக்காட்டை ஒட்டி யுள்ள தடாகம் மலையடிவார பகுதிகளில் மண் அள்ளி வரு கின்றன. மூன்றடி வரை மட்டுமே மண் அள்ள விதிமுறை உள்ள நிலையில் இங்கு முற்றிலும் சட்ட விரோதமாக 25 முதல் 30 அடி வரை செம்மண் அள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் ஐம்பதடிக்கும் மேல் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியே பெரும் பள்ளத்தாக்கு போல் காட்சியளிக்கின்றது. இதனால் மலையில் இருந்து கீழ் நோக்கி வரும் நீராதாரங் கள் முற்றிலுமாக தடைப்பட்டுள் ளதுடன், செங்கல் சூளைகளில் இருந்து வெளியேறும் புகை மற் றும் தூசால் இப்பகுதியை சுற்றி யுள்ள ஊர் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்ற னர். விதிகளை மீறி இரவும் பகலும் விடாமல் மண் அள்ள்ப பட்டு வருவதால் இயற்கை சூழல் சிதைக்கப்பட்டு மனிதர்கள் மட்டுமின்றி வன உயிரினங்க ளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இப்பகுதி வனத்தை வாழ்விடமாகவும் வலசை பாதை யாகவும் பயன்படுத்தி வரும் யானைகள் சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றன. தனது இயல்பான வழித்தடப்பாதை துண்டாடப் பட்டு வருவதால் வழி தவறும் யானைகள் அருகில் உள்ள ஊர் களுக்குள் புகுந்து யானை மனித மோதல்களும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரு கின்றன. ஆபத்தான வகையில் வெட்டப்பட்டுள்ள பள்ளங்களில் விழுந்து யானைகள் உயிரிழக் கவும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, கோவை வனத்துறை சார்பில் விதி மீறும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில், “பெரும் பள்ளங்களை ஒட்டிய சரி வில் யானைகள் வலசை செல்லும் போது சறுக்கி விழுந்து யானைகள் இறக்க வாய்ப்புள்ளது. மேலும் யானைகள் அவ்வழியை தவிர்த்து அருகில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து வேறு வழியாக கடக்க முயலும் போது பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் கடும் சேதம் ஏற்படுகிறது. எனவே அரசு அனுமதி பெறா மல் இயங்கும் செங்கல்சூளை கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட பல மடங்கு அதி கமான பள்ளத்தை தோண்டி மண் அள்ளும் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வே்ண டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கையினை வரவேற்கும் சூழழியல் ஆர்வலர்கள், உடனடி யாக கோவை மாவட்ட நிர்வாக மும் கனிம வளத்துறையும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.