வானதி சீனிவாசன் பேச்சு
சேலம், செப்.8- சேலம் உருக்காலையை பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கை களையும் எடுத்து வருவ தாகவும், ஆனால் உலக அளவிலான ஒப்பந்தம் கோருவதை உடனடியாக ரத்து செய்ய முடியாது எனவும் பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனி வாசன் தெரிவித்தார். சேலம் உருக்காலையை தனியார் மய மாக்கும் முயற்சியை கண்டித்து உருக் காலை தொழிலாளர்கள் கடந்த 35 நாட் களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் உருக்கு பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக் கையை கைவிடக்கோரி உருக்காலை தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் 35 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை ஞாயிறன்று பாஜக தமிழக பொது செய லாளர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து பேசினார்.
உருக்காலை குறித்து மத்திய எக்கு துறை அமைச்சர் தரமேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தியதாகவும், அப்போது அவர், சேலம் உருக்காலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித் துள்ளார். மேலும் மூல பொருட்கள் விலையை குறைத்து நட்டத்தை குறைக் கவும், விற்பனை பிரிவை தனியாக பிரிக் கவும் நடவடிக்கை எடுப்பதுடன், தொழி லாளர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் வேலை இழப்பு ஏற்படாது என்று உறுதி யளித்துள்ளதாக தெரிவித்தார். உருக் காலை நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார். மேலும் ஆலை முழுவதும் அரசின் கட்டுப் பாட்டில் இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்த அவர், தமிழக தொழில்துறை அமைச்சரிடம் உருக்காலை பங்குகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசும்போது, கேந்திர வித்தியாலயா பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று தெரி வித்தார். சேலம் உருக்காலையை பாதுகாக்க அனைத்து கட்சி தலைவர்கள் தொழிற்சங்க இயக்கத்தினர் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தொழிற்சாலையை விற்க நினைக்கும் பாஜக கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் இப்படி பேசியுள்ளது சந்தர்ப்பவாதம் என உருக்காலை தொழி லாளர்கள் கருத்து தெரிவித்தனர்.