tamilnadu

img

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா ஆகியோரை ஆதரித்து வெள்ளியன்று பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடன் வேட்பாளர்கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராஜன் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளனர்.


கோவை போத்தனூர் பிரிவு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தில் தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை மற்றும் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் ஆகியோரை ஆதரிப்பது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மூன்று மாவட்டத்தின் தலைமை இமாம் முஹ்மது ரஹிம், கோவை மாவட்ட இமாம் ஜலாலுதீன் மற்றும் உலாமாக்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, இந்த கூட்டத்தை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலகுழுவின் மாநில நிர்வாகி மூசா, மாவட்ட நிர்வாகிகள் ஜெரோம் ரோட்டரிக், லாரன்ஸ், காங்கிரஸ் தரப்பில் கபூர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், துணை தலைவர்கள் சந்திரன், ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


;