tamilnadu

பெண் தற்கொலை

கோவை. பிப். 12 -  திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகி யும் குழந்தை இல்லாத காரணத்தினால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்ப குதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், கோவை சூலூர் காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி(35). இவரது மனைவி மகேஸ்வரி (30). இந்நிலையில், திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மனவேதனையடைந்த மகேஸ்வரி சாணி பவுடர் குடித்து தற் கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்ப டுத்தியுள்ளது. இது குறித்து சூலூர் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.