tamilnadu

கோயில்களில் தீ வைப்பு சம்பவம்: சேலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது

கோவை, ஜூலை 19- கோவையில் அடுத்தடுத்து கோயில்களில் தீ வைத்து  சேதப் படுத்தப்பட்ட விவகாரத்தில், சேலத் தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்த னர். கோவையில் அடுத்தடுத்து 4  கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக பந்தயசாலை, உக்க டம், வெரைட்டி ஹால், துடியலூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆறு தனிப்படைகள் கொண்டு விசா ரணை மேற்கொள்ளப்பட்டது. இவ் விசாரணையில் கோயிலை சேதப்ப டுத்திய நபர் சேலத்தைச் சேர்ந்த கஜேந் திரன் என்பது தெரிய வந்தது. இத னைத்தொடர்ந்து கஜேந்திரனின்  புகைப்படத்தை கொண்டு தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், சேலத்தில் வைத்து கைது செய்தனர்.  மேலும், இந்த நபர் கஞ்சா போதை யில் இதை செய்திருக்கலாம் எனவும், மேற்கொண்ட விசாரணை நடத்திய பிறகே முழுவிபரம் தெரியவரும் என வும் போலீசார் தரப்பில் கூறப்படு கிறது. 

;