மணல் கடத்தலை தடுக்க பொதுமக்கள் அடங்கிய குழு அமைப்பு
தாராபுரம், ஜுன் 24- தாராபுரத்தில் மணல் கடத்தலை தடுக்க பொதுமக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இரவு நேரத்தில் மணல் கடத்தல் தடுப்பு பணி மேற்கொள்ள உள் ளனர். தாராபுரத்தை அடுத்துள்ள மதுக்கம் பாளைத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் அமராவதி ஆற்றை நம்பி உள்ளது. அமராவதி ஆற்றங்கரை ஒட்டி உள்ள இக்கிராம பகுதியில் ஆற்றில் தண்ணீர் விடும் காலங்களில் நெல், கரும்பு உள்பட பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்களில் அமராவதி ஆற்றில் உள்ள நிருற்றுகள் நம்பி கிணற்று பாசனம் முலம் தக்காளி, வெண்டை, பாகல், புடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அண்மைகாலமாக மதுக்கம்பாளையம் பகுதியில் இரவுநேரத்தில் மாட்டுவண்டி மற்றும் கனரக வாகனங்கள் முலம் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் ஆற்றின் நீருற்றுகள் பாதிக் கப்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊர் பொது மக்கள் ஒன்று கூடி குழுக்கள் அமைத்து மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நிலக்கடலை ஏலம்
அவிநாசி. ஜூன் 25 – சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத் தில் 180 மூட்டைகள் வந்தி ருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.6,100 முதல் ரூ.6,350 வரையிலும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.5,800 முதல் ரூ.6,000 வரையிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ, 4,900 முதல் ரூ. 5,200 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.5லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.