tamilnadu

தாராபுரம் மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

மோட்டார் வைத்து  தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை

தாராபுரம், ஜூலை 3 – கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் பொதுக் குழாயில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். தாராபுரம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்குட்பட்ட சேரன் நகர், கொண்டரசம் பாளையம், ஜீவாகாலனி, முல்லை நகர், பெஸ்ட் நகர் பகுதிகளில் பொதுமக்கள் உபயோகத்திற்காக பொது  குடிநீர் குழாய் இணைப்பு  உள்ளது. இந்த பொதுக் குழாயில் மோட்டார் மூலம் வீட்டிற்கு சிலர் தண்ணீர் உறிஞ்சி எடுப்பதாக புகார் வந்துள்ளது.  இதையடுத்து அப்பகுதி யில் ஆய்வு மேற்கொண்ட வட்டார வளர்ச்சி அலு வலர் ஜீவானந்தம், அங் கிருந்த ஓஸ்களை வெட்டி விட்டு, இனிமேல் பொதுக் குழாயில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சி னால் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீரில் மூழ்கி தொழிலாளி பலி
திருப்பூர், ஜூலை 3 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒன்ப தாம் பள்ளக் குட்டையில்  மீன்பிடித்த அம்மாபாளை யத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சின்ராஜ் (23) தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து  பல்லடம் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.