தாராபுரத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தாராபுரம், செப்.11 - தாராபுரத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.12) நடைபெறுகிறது. இதுகுறித்து தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் மகேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, தமிழ்நாடு மின்சார வாரியம், பல்லடம் மின்பகிர் மான வட்டம், தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர் வோர் குறைதீர்க்கும் கூட்டம் வியாழனன்று காலை 11 மணியளவில் தாராபுரம் செயற்பொறியாளர் அலுவல கத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், மின்நுகர்வோர் குறைகள் கேட்கப்பட்டு தீர்வு காணப்பட உள்ளதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் மக்கள் தொடர்பு முகாம்
கோவை, செப்.11- வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், வால்பாறை வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள் ளது. இதில், அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளதால் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். தவிர அரசு நலத் திட் டங்கள் குறித்த விவரங்கள் பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.