tamilnadu

அவிநாசியில் அரசு பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்

அவிநாசி, செப்.25 - அவிநாசியில் செவ்வாயன்று இரவு அரசு பேருந்து மீது டேங்கர் லாரி மோதிய  விபத்தில் 3 பேர் படுகாய மடைந்தனர்.  கோவையிலிருந்து அரசு பேருந்து ஒன்று 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேலம் நோக்கி சென்று கொண்டி ருந்தது. அவிநாசி புறவழிச்சாலை அருகே பேருந்து சென்ற போது  எதிரே ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பைத் தாண்டி, அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த சேலம் ராக்கியாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமிக்கு (45) கை துண்டிக்கப் பட்டது. மேலும் சேலம் வஉசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி ஹரன் (18),  மணிகண்டன்(29) ஆகியோர் பலத்த காயம டைந்து சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து  தலைமறைவான டேங்கர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.