கோவை, மே 16-கோவையில் நடைபெறும் 36-வது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரா அணியை 18 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு பெண்கள் அணி வீழ்த்தியது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்குட்பட்டோருக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. 21-ம் தேதி வரை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டுஅரங்கில் நடக்கும் இந்தப் போட்டியில்25 மாநிலங்களைச் சேர்ந்த 700-க்கும்மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில்,லீக் போட்டியில் தமிழ்நாடு பெண்கள்அணி, மகாராஷ்டிராவை எதிர்கொண்டு விளையாடியது. இதில், 68-50 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது. தமிழக அணியின் வீராங்கனை சத்யா 28 புள்ளிகள் பெற்றார்.மற்றொரு போட்டியில் கேரளா அணி 76-75 என்ற புள்ளிகள் கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை தோற்கடித்தது. கேரள அணி வீராங்கனை அனின் மேரி 25 புள்ளிகள் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.இதேபோல், ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணி 65-63 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கர்நாடகாவை தோற்கடித்தது.