பவானி, ஜூலை 22- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண் டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பவானி சாகர் ஒன்றிய எதிர்ப்பு மாநாடு பு.புளியம்பட்டியில் ஞாயிறன்று நடைபெற்றது. பி.ஜெக நாதன் தலைமை வகித்தார். என்.சின் ராஜ் வரவேற்றார். மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.குழந்தைவேல்சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தலைவராக சி.சேகர், செயலாளராக பி.ஜெகநாதன், பொரு ளாளராக ஏ.மணி மற்றும் 19 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப் பட்டது. முன்னதாக பவானிசாகர் ஒன்றி யத்தில் இரட்டை டம்ளர்முறை மற் றும் முடிதிருத்தும் கடைகளில் கடை பிடிக்கும் தீண்டாமையைக் கை விட வேண்டும். ஜெஜெ.நகர் பகுதி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். தலித் மாண வர்களுக்கு துணைத் திட்ட நிதியை காலதாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.