தருமபுரி, பிப்.26- ஏரிமலை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தையற்பயிற்சி துவக்க விழா புதனன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்திலிருந்து 7கி.மீ., தூரம் மலைபகுதியில் ஏரிமலை, கோட்டூர், அலக்கட்டு, கொடகரை ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளது. ஏரிமலை அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 95 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்று தான் வருகின்றனர். இப்பள்ளி மாணவர் களுக்கு கைத்தொழில் கற்றும் கொள்ளும் வகையில் தையற்பயிற்சி, மோட்டார் ரிவைண்டிங்,கணிணி-செல்போன் ஹார்டு வேர் மற்றும் சாப்ட்வேர் பயிற்சி, ஓவியப் பயிற்சி, ஆர்கானிக் விவசாய சாகுபடி பயிற்சி மற்றும் போட்டிதேர்வுகளுக்கான பயிற்சியும் ஆண்டு முழுவதும் மாணவர் களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் மாணவர்களின் சிக்கன நாணய சங்கமும் செயல்படுகிறது. இப்பயிற்சிக் கான செலவினங்கள் தொண்டு நிறுவ னங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்குகிறது. இப்பயிற்சி மைய துவக்கவிழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தா. இராமலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார். தையல் பயிற்சி மையத்தை பேவுஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜி.பிரகாஷ் துவக்கி வைத் தார்.வட்டார கல்வி அலுவலர் அண்ணா துரை, வட்டுவன அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தராஜி, ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் சக்தி வேல்,மேனகிங் டிரைக்டர் முரளி, இந்தியன் வங்கி உதவிமேலாளர் பி.ஆறுமுகம், ஜெயின்பால்மெட்ரிக் தாளாளர் வி. ஜெகதீசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மலைக்கிராம பொது மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.