அவிநாசி, மே 22- அவிநாசி அருகேயுள்ள சேவூரில் 100 இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி சட்டமன்ற சபாநாயகர் சார்பில் அரிசி உள்ளிட்ட நிவார ணப் பொருட்கள் வழங்கப்பட்டது . கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவ தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர டங்கின் காரணமாக ஏராளமான ஏழை, நடுத்தர மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலை யில் வரும் மே 25 ஆம் தேதியன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டமன்ற சபாநாயகருமான ப.தனபால் சார்பில் சேவூரில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அவிநாசி ஒன்றிய குழு தலைவர் அ.ஜெகதீசன், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வேலு சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.