திருப்பூர், ஆக. 16 – ஊத்துக்குளி புத்தகக் கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். ஊத்துக்குளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் திடலில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் வெள்ளியன்று திரளான மாணவர்கள் ஆர்வமுடன் வருகை தந்து புத்தகங்களைப் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். பாரதி புத்தகாலயம், விகடன் பதிப்பகம், மகேஸ்வரி புத்தக நிலையம், நம்மாழ்வார் வழி இயல்வாகை சூழ லியல் அமைப்பு என அரங்குகள் அமைக்கப்பட்டு ஆயி ரக்கணக்கான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. சனியன்று இரவு 9 மணிக்கு இக்கண்காட்சி நிறைவடைகிறது.