கட்டணம் கட்ட சொல்லி நிர்பந்தம்
கோவை, ஜூன் 2 – கல்வி நிலையங்கள் திறக்கப்படும் சூழலே இல்லாத நிலையில் உடனடி யாக கல்வி கட்டணம் கட்ட வேண்டும் என பெற்றோர்களை நிர்பந்தப்படுத் தும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவ்வாயன்று இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். முன்னதாக கோவை மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண கொள் ளையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதி கரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தி லும் நாளுக்கு நாள் ஆயிரத்தை தாண் டுக்கிறது. இதன்காரணமாக மக்களி டம் இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து நமது மாநில அரசும் வீட்டு வாடகை கேட்க கூடாது, கல்வி கட்ட ணத்தை நிர்பந்தப்படுத்தி வசூலிக்க கூடாது என பல்வேறு அறிவுறுத்தல் களை வழங்கியுள்ளது. ஆனால் அர சின் இந்த உத்தரவுகளை எந்த நிறு வனங்களும் மதிப்பதாய் தெரிய வில்லை. இம்மாதிரியான காலகட்டத் திலும் ஏழை, எளிய மாணவர்களின் கல் வியில் வியாபாரம் செய்யும் நோக் கில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி கள் மாணவர்கள் மீது கட்டண சுமையை ஏற்படுத்துகிறது. மாணவர்க ளிடம் தொகையை கட்ட சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. இத னால் மாணவர்களின் மனநிலை பாதிப்பு ஏற்படும் மேலும் பல குடும் பங்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள நிர் மலா மாத பள்ளியில் கட்டணம் கட்ட சொல்லி மாணவர்களுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது போன்ற நிலை மாணவர்களின் பெற் றோர்களை மன உழைச்சலுக்கு உள் ளாக்கும். எனவே இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய தலை யீடு செய்ய வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இம்மனுவை அளித்தனர்.