tamilnadu

img

நீரோடை ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

சேலம், செப்.26- இளம்பிள்ளை அருகே  நீரோடையை ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள தாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே இடங் கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழுமாத்தனூர், ஜெயம் கார்னர் பகுதியில் தனிநபர்கள் ரியல் எஸ் டேட் தொழிலுக்காக நீரோ டையை ஆக்கிரமித்துள் ளனர்.இதில் கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து  வரும் அகலமான நீரோடையில்  குழாய் அமைத்து வருகின்றனர்.  இதனால் ஏரி, குளம், குட்டைகளுக்கு மழை நீர் செல்லாத வகையில் தடுப்பு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், இடங்கணசாலை  பகுதியில் உள்ள காடையாம்பட்டி ஏரிக்கு வரும் நீரோடையை பல  இடங்களில் தனிநபர்கள் ரியல்  எஸ்டேட் தொழிலுக்காக ஆக்கிரமித் துள்ளனர். இந்த நீரோ டையில் குழாய் அமைத்து, நீரோடையின் அகலத்தை சுருக்கி உள்ளனர். இத னால் நீரோடையில் தண்ணீர் குறைந்தளவு மட்டுமே செல்கிறது.  இதன் காரணமாக இந்தப் பகுதி யில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரு கிறது. இதுகுறித்து வரு வாய்த்துறை அதிகாரி களிடம் பலமுறை தெரி வித்தும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. ஆகவே,  இடங்கணசாலை  பேரூ ராட்சி நிர்வாகமும், வருவாய்த் துறை யினரும் நீரோடை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.